ரேஷன்கடை ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடை ஊழியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த போராட்டம் தொடர்கிறது. எனவே நியாயவிலை கடைகளில் இருக்கின்ற ஊழியர்களுக்கு அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து உடனடியாக அரசு அதை நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ரேஷன்கடை ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: