×
Saravana Stores

மூதாட்டியிடம் நகை பறிப்பு

அன்னூர்,அக.26: கோவில்பாளையம் அருகே விசுவாசபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி மீனா குமாரி (52). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது பேத்தியை அழைத்து வர நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் மீனா குமாரியின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார்.

அப்போது மீனா குமாரி தங்கச் சங்கிலியை கையால் பிடித்துள்ளார். அப்போது அந்த தங்க சங்கிலி அறுந்துள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அந்த மர்ம நபர் தப்பியுள்ளார். இது குறித்து மீனா குமாரி கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறி செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post மூதாட்டியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Meena Kumari ,Rajan ,Visyapuram ,Kovilpalayam ,
× RELATED பிரபல மாபியா கும்பல் தலைவரான சோட்ட...