இதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தகவலறிந்த திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி தலைமையில் அலுவலர்கள் எண்ணூர் பகுதிக்கு வந்து விசாரித்தனர். அப்போது நீர்வளத்துறையின் அனுமதியுடன் முகத்துவாரத்தில் எடுக்கும் மணலை பெருங்குடி பகுதிக்கு எடுத்து செல்வதாக லாரி டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அதற்கான உத்தரவு ஆணையை காண்பிக்கும்படி நீர்வளத்துறை அதிகாரியிடம் தாசில்தார் கேட்டுள்ளார். அப்போது, சென்னை மாவட்ட கலெக்டர் மூலம் திருவொற்றியூர் வருவாய் துறைக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். சரியான உத்தரவையும், பெருங்குடியில் மணல் கொட்டப்படும் புகைப்படத்தையும் எடுத்து வந்து நேரில் காண்பிக்கும்படி கூறிய தாசில்தார், லாரியின் பதிவு எண்களை குறித்து கொண்டு அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆற்றிலிருந்து தூர்வாரப்பட்ட மணல் கரை ஓரத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் இந்த மணல் பருவ மழையின் போது மீண்டும் கரைந்து ஆற்றிலே போய்விடும் என துணை முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் மணல் இங்கிருந்து எடுக்கப்பட்டு கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி ஆகிய பகுதிகளில் தாழ்வாக உள்ள அரசு நிலங்களில் நிரப்பப்படுகிறது. இந்த மணல் எடுப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதியும் பெறப்பட்டுள்ளது’’ என்றனர்.
The post எண்ணூர் கொசஸ்தலை ஆற்று மணல் எடுத்துச்சென்ற லாரிகள் தடுத்து நிறுத்தம்: தாசில்தார் மடக்கி பிடித்து விசாரித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.