காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் 38 பேர் பலி: லெபனானில் 3 பத்திரிகையாளர்கள் பலி

பெய்ரூட்: காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர். அதே போல் லெபனானில் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் உள்ள கான்யூனிஸ் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் பலர் பெண்கள்,குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.இந்த நிலையில், லெபனானில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான் வெளி தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என்று லெபனான் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் ஜியாத் மக்கரி தெரிவித்தார்.

The post காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் 38 பேர் பலி: லெபனானில் 3 பத்திரிகையாளர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: