நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம் பைக்கிலிருந்து விழுந்த சப் இன்ஸ்பெக்டர் பலி

நெல்லை: சாலையின் நடுவே திடீரென நாய் குறுக்கே பாய்ந்ததால் பைக்கில் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிலைதடுமாறி விழுந்து பலியானார். நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகேயுள்ள மேல கொட்டாரம் கீழ நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா(57). இவர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 21ம்தேதி பணி முடிந்து இரவு 10 மணி அளவில் பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அம்பாசமுத்திரம் ரயில்வே கேட் பக்கமுள்ள தனியார் மில் அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நாய் திடீரென குறுக்கிட்டதால் சுப்பையா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நெல்லை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பலனின்றி இன்று (வெள்ளி) அதிகாலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம் பைக்கிலிருந்து விழுந்த சப் இன்ஸ்பெக்டர் பலி appeared first on Dinakaran.

Related Stories: