பசும்பொன் குருபூஜைக்கு வாடகை வாகனம்.. மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை: தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல உத்தரவிடக் கோரிய வழக்கில் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எந்த வாகனங்களில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த வழக்கில் ராமநாதபுரம் ஆட்சியர் பதில்தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. பசும்பொன் செல்ல காவல் துறையினர் வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

The post பசும்பொன் குருபூஜைக்கு வாடகை வாகனம்.. மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: