இந்நிலையில், அமைச்சர் கொன்ட சுரேகாவுக்கு எதிராக ஐதராபாத்திலுள்ள சிவில் நீதிமன்றத்தில் பிஆர்எஸ் செயல் தலைவர் கேடி ராமராவ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “அமைச்சரின் கருத்து மிகவும் ஆட்சேபனைக்குரியது. இதுபோன்ற கருத்துகள் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ஆர் குறித்து அவதூறு பேச அமைச்சர் சுரேகாவுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் சர்ச்சை கருத்து தொடர்பான வீடியோவை சமூக ஊடக தளங்கள் மற்றும் டிஜிட்டல் சேனல்களில் இருந்து உடனடியாக நீக்கவும் உத்தரவிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்து வழக்கை முடித்துவைத்தது.
The post நடிகை சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா அமைச்சர் சுரேகாவுக்கு ஐதராபாத் சிவில் நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.