காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதில் தோல்வி: ராகுல் காந்தி

டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு, அமைதியை நிலை நாட்டுவதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டன. தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் நமது வீரர்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்வது தொடர்கிறது. தாக்குதல்களை நடத்தி குறிவைத்து கொல்லப்படும் நிகழ்வுகளால் அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை என்றும் அவர் தெரிவித்தார்.

The post காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதில் தோல்வி: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: