×
Saravana Stores

பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னை மாநகர பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த திரு.ஜெ.ஜெகன் குமார் (பணி எண்.C52200) பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 24.10.2024 இரவு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் திரு.ஜெ.ஜெகன் குமார் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த நடத்துநர் திரு.C.ஜெகன்குமார் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Jegankumar ,Viasarpadi Workplace Bus ,Mahagavi Bharatiar City ,CM ,
× RELATED திராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது...