வைத்திலிங்கத்தின் இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. சென்னை அசோக் நகரில் உள்ள வைத்திலிங்கத்துக்கு சொந்தமான 6 அலுவலகங்களில் சோதனை நிறைவு பெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 2011 – 2016 காலகட்டத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது

The post வைத்திலிங்கத்தின் இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: