இந்த மாதம் 19ம் தேதியில் இருந்து 23ம் தேதிக்குள் அங்கு தாக்குதல் நடத்தப்படலாம் என இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இலங்கை போலீசின் தீவிரவாத தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஈராக்கில் இருந்து வந்தவர் என இலங்கை போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதற்கிடையே, இலங்கையில் அருகம்பைக்கு செல்லவேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரகம் தனது நாட்டு மக்களை கேட்டு கொண்டுள்ளது.
The post இஸ்ரேல் பயணிகளை தாக்க இலங்கையில் சதித்திட்டம்: இந்தியா எச்சரிக்கையால் 3 பேர் கைது appeared first on Dinakaran.