திருவேங்கடத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருவேங்கடம்,அக்.25: குருவிகுளம் வடக்கு ஒன்றியம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருவேங்கடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தார். மகளிர் அணி மாநில துணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவ ஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கடம்பூர் ராஜூ பேசினார். கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் கண்ணன், விவசாய அணி வடக்கு மாவட்டச் செயலாளர் பரமகுருநாதன்.

பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், ராமச்சந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் சண்முகப்பிரியா, எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளர் ரவிச்சந்திரன், வக்கீல் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் ராமேஸ்வரன், குருவிகுளம் ஒன்றிய ஐடி பிரிவு செயலாளர் நவீன்ராஜ், அமுதா பாலசுப்பிரமணியன், தேவராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை குருவிகுளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post திருவேங்கடத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: