புதுக்கோட்டை அருகே 1.5 கிலோ கஞ்சா, ₹10 ஆயிரம் பறிமுதல் 4 பேர் கைது

தூத்துக்குடி, அக். 25:தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 4 பேர் கும்பல் தப்பியோடியது. போலீசார் விரட்டி சென்று அவர்களை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் 1.5 கிலோ கஞ்சா மற்றும் பணம் 10 ஆயிரம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் தூத்துக்குடி முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து மகன் மாடசாமி(27), சுடலைமுத்து மகன் நம்பிராஜன்(20), நட்டார் மகன் நட்டார் என்ற ராஜேஷ்(20), கணேசன் மகன் ரமேஷ்(28) ஆகியோர் என்பதும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதும், அவர்கள் திருப்பூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post புதுக்கோட்டை அருகே 1.5 கிலோ கஞ்சா, ₹10 ஆயிரம் பறிமுதல் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: