×
Saravana Stores

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 2 வீரர் உட்பட 4 பேர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வாகனத்தின் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில்,2 வீரர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.  காஷ்மீரில் தற்போது தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் கூட இந்த தாக்குதல் நீடித்தது. தற்போது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், குல்மார்க் பகுதியில் நேற்று மாலை ஒரு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் அந்த வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அதே போல் 2 அப்பாவி மக்களும் பலியானார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் பட்குண்ட் டிரால் என்ற பகுதியில் உபியை சேர்ந்த பிரித்தம் சிங் என்ற தொழிலாளரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 2 வீரர் உட்பட 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Srinagar ,Kashmir ,Dinakaran ,
× RELATED காஷ்மீர் இளைஞர்களை குறிவைத்து...