மேலும் இம்மாதம் 27ம் தேதிக்குள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், சென்னை- பெங்களூரு வழித்தடம் உள்ளிட்ட குறிப்பிட்ட விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் சலுகை கட்டண பயணத்தை நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 10 தேதி வரையில், 40 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த குறைந்த சலுகை கட்டண பயணத்தின் போது, பயணி ஒருவர், 3 கிலோ எடையுடைய உடமைகளை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். கூடுதலாக 15 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துச் செல்வதற்கு, ரூ. 1,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
The post தீபாவளி பண்டிகையை ஒட்டி உள்நாட்டு பயணிகளுக்கு சலுகை பயண கட்டணம்: ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.