ஆசாரிபள்ளத்தில் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு: பெயிண்டரிடம் விசாரணை


நாகர்கோவில்: ஆசாரிபள்ளம் பெருமாள் நகரை சேர்ந்தவர் முருகன். அவரது மகன்கள் விக்னேஷ் (32), விவேக். இதில் விக்னேஷ் பெயிண்டராக உள்ளார். விவேக்குக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. இந்தநிலையில் விக்னேஷ் அவரது தயாரிடம் தனக்கு வரவேண்டிய சொத்தை பிரித்து தரவேண்டும் என்று தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையே நேற்று இரவு குடிபோதையில் வந்த விக்னேஷ் இது தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் விக்னேஷ் பெட்ரோலை எடுத்துவந்து சகோதரர் விவேக்கின் கார்மீது ஊற்றி தீ வைத்தார்.

காரில் தீபிடித்து எரிந்தது. இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும், ஆசாரிபள்ளம் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு மாவட்ட துணை அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து ஆசாரிபள்ளம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விக்னேசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆசாரிபள்ளத்தில் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு: பெயிண்டரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: