அச்சுறுத்தல்கள் காரணமாக, தொழில் துறையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கு பின்னால் உள்ள தனிநபர்கள் விமான பயணம் செய்ய தடை விதிக்கப்படும். நாங்கள் விமான நிலையங்களில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துகிறோம். இது எந்த விதமான பயத்தையும், பீதியையும் பரப்ப வேண்டிய தருணம் அல்ல. மக்கள் பயப்பட வேண்டாம். ஒன்றிய அரசு தேவையான அனைத்து நடடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
The post விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பொதுமக்கள் பயப்பட வேண்டாம்: விமான போக்குவரத்து துறை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.