சென்னை: அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற சிவகங்கைச் சீமையின் தீரர்களான மருதிருவரைப் போற்றுகிறேன் என மருது சகோதரர்களின் 223 வது நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தியாகத்தின் அடையாளங்களாக வாழ்ந்த மருதிருவர்கள் மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார்கள் என்றும் தெரிவித்தார்.