தங்கம் விலை சற்று குறைந்தது.. சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை: நகை வாங்குவோர் மகிழ்ச்சி..!!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.58,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டு, தொடர்ந்து விலை உயர்ந்து வந்ததால் நகை பிரியர்களிடையே கவலை ஏற்பட்டது. அதுவும், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் ஒரு ரூபாய் கூட தங்கம் விலை குறையவில்லை. கடந்த வாரம் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.58ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி, இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.58,400க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை ஆனது. இந்நிலையில், புதன்கிழமையான நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.7,285க்கு விற்பனையாகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

The post தங்கம் விலை சற்று குறைந்தது.. சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை: நகை வாங்குவோர் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: