நீரில் தவறி விழுந்தவர் சாவு

கோவை, அக்.24: கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (60). இவர் செல்வபுரம் பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள நீர் வாய்க்கால் கரையில் அமர்ந்திருந்தார். திடீரென தடுமாறி அவர் நீரில் விழுந்து விட்டார். அதிக வெள்ளம் பாய்ந்த இந்த வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட இவர் மூச்சு திணறி இறந்தார். சடலம் காணாத நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் அரை கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக இறந்து கிடந்தார். இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post நீரில் தவறி விழுந்தவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: