×
Saravana Stores

நெல்லை அருகே சுத்தமல்லியில் டாஸ்மாக் கடை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை

பேட்டை: நெல்லை அருகே சுத்தமல்லியில் உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூர் சீதபற்பநல்லூர் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் மேற்பார்வையாளராக நரசிங்கநல்லூரைச் சேர்ந்த முருகன் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து இரவு 10 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சுத்தமல்லி போலீசார் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு டாஸ்மாக் கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு அட்டைப்பெட்டி குவாட்டர் பாட்டில்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து மது பாட்டில்களை திருடி சென்ற மா்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post நெல்லை அருகே சுத்தமல்லியில் டாஸ்மாக் கடை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Sudtamalli ,Nellai ,Pettah ,Suthamalli ,Sitapalpanallur Road, Nadukkallur ,Narasinganallur ,Nellie ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அருகே தாராசுரத்தில்...