குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி

தென்காசி:குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அனைத்து அருவிகளிலும் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்தில் நேற்று பகலில் மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து மாலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தண்ணீர் கலங்கலாக விழுந்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய மூன்று பிரதான அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: