திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே உள்ள முல்லை நகர் பகுதியில் உள்ள இளங்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர்களின் மகள் 12ம் வகுப்பு படித்து வந்தார். மகன் கோவையில் தனியார் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மகன் தனது வீட்டிற்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டபோது யாரும் அழைப்பை ஏற்காத நிலையில் அருகில் உள்ள நண்பருக்கு தொடர்பு கொண்டு தனது வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

அப்போது அந்த வீடு உள்ளே தாழிட்டு கொண்டுள்ளது. வெகு நேரமாகியும் யாரும் கதவை திறக்காததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் தாய் மற்றும் மகள் மருந்து குடித்தும், கழுத்தறுபட்டும் இறந்து கிடந்துள்ளனர்.

மேலும் தந்தையும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: