×
Saravana Stores

ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் உத்தரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வீரக்கல் கிராமம், கொத்திக்குட்டை ஏரியில் கடந்த 20ம் தேதி பகல் 12 மணியளவில் வீரக்கல் புது காலனியைச் சேர்ந்த சிவலிங்கம் மகள் சிவநந்தினி (வயது 20), மகன் சிவகிரி (வயது 10) மற்றும் முனுசாமி மகள் திவ்யதர்ஷினி (வயது 14) ஆகிய மூவரும் துணி துவைக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,M.K.Stalin ,Salem District ,Mettur Circle ,Veerakkal Village ,Kothikuttai Lake ,Sivanandini ,Sivalingam ,Veerakkal New Colony ,
× RELATED நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள்...