பைக்கில் குட்கா கடத்தியவர் கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெரியபாளையம் சோதனைச்சாவடி மும்முனை சந்திப்பில், நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த பைக்கை மடக்கி, போலீசார் சோதனையிட்டதில், மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார், அந்த நபரைப் பிடித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமசாமி (45) என்பதும், ஆந்திரா மாநிலம், நாகலாபுரம் பகுதியிலிருந்து விற்பனைக்காக குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து 40 கிலோ குட்கா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், ராமசாமியை கைது செய்தனர்.

The post பைக்கில் குட்கா கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: