இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஊராட்சி மன்ற தலைவரிடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது, இக்காலனி சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுவதால், சோளிங்கர் மற்றும் எரும்பி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஜல்லிகற்கள் பெயர்ந்து கரடுமுரடாக காணப்படும் சாலையை அகற்றிவிட்டு, புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.