அதேபோல, பூங்காவில் உள்ள கழிப்பறை முழுவதுமே அசுத்தம் நிறைந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக, பூங்கா முழுவதுமே மழைநீர் சூழ்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கியுள்ளதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாக, அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், 500 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா பூங்கா உள்ளே செல்வதற்குகூட பாதை இல்லாமல், அதை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. எனவே, மறைமலைநகர் நகராட்சி சார்பில் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்களை சரி செய்து தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மறைமலைநகர் ஸ்ரீவாரி நகரில் சிறுவர் பூங்காவில் தேங்கிய மழைநீர்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.