அண்ணன் சொத்து பிரித்து தராததால் தம்பி தூக்கிட்டு தற்கொலை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே அண்ணன் குடும்ப சொத்தை பிரித்து கொடுக்காததால் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளைப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயியான இவருக்கு குடும்ப சொத்து உள்ளது. இதில், இவருக்கான பாகத்தில் வரவேண்டிய சொத்தை பிரித்துக் கொடுக்க சொல்லி தனது அண்ணனிடம் பலமுறை கேட்கும் போதெல்லாம் அடிக்கடி அண்ணன், தம்பி இருவருக்குமிடையே வாக்குவாதம், சண்டை ஏற்படுவது வழக்கம். சொத்தை பிரித்துக் கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்த பொன்னுசாமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார், தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கழுக்குன்றம் போலீசார், இறந்துப்போன பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அண்ணன் சொத்து பிரித்து தராததால் தம்பி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: