திருவிக நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் செல்போன் டவரை ஆய்வு செய்தபோது சிறுமி தூத்துக்குடியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசாரை அனுப்பி நேற்று முன்தினம் சிறுமியையும், அவருடன் இருந்த 27 வயதுடைய கராத்தே பெண் பயிற்சியாளரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், கராத்தே பெண் பயிற்சியாளர் இன்னும் சிறிது காலத்தில் ஆணாக மாற உள்ளதாகவும், அவர் சிறுமியை காதலித்து வருவதாகவும், எனவே, சிறுமியை அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். சிறுமியும் கராத்தே பெண் பயிற்சியாளரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்ததால் குழப்பம் அடைந்த போலீசார் சிறுமியின் பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்து அவருக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கராத்தே வகுப்புக்கு சென்றபோது நெருக்கம் பெண் பயிற்சியாளருடன் பிளஸ் 2 மாணவி ஓட்டம்: ஆணாக மாறி திருமணம் செய்ய உள்ளதாக கூறியதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.