மேலும் கூடுதலாக 26 சதவீத பங்குகளை வாங்க ஓப்பன் ஆபரையும் அதானி குழுமம் அறிவித்துள்ளது. இந்த ஓப்பன் ஆபரில் ஒரு பங்கை ரூ.395.40 விலைக்கு வாங்க உள்ளதாகவும், இதற்கான பணிகள் 4 மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. ஓரியண்ட் சிமெண்ட்சை கையகப்படுத்துவதன் மூலம் 25ம் நிதியாண்டின் இறுதிக்குள் அதானி சிமெண்ட்ஸ் ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன் என்ற இலக்கை அடையும், நாட்டின் ஒட்டு மொத்த சந்தை பங்கில் 2 சதவீத லாபம் பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
The post ரூ.8,100 கோடிக்கு ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தை கைப்பற்றிய அதானி appeared first on Dinakaran.