இத்தேசத்தில் உள்ள பொதுத்துறைகள் காவிமயமாக்கப்படுவது ஏன்?: செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை: அனைவரும் விரும்பும் காவியமான இத்தேசத்தில் உள்ள பொதுத்துறைகள் காவிமயமாக்கப்படுவது ஏன்? என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ் லோகோவைத் தொடர்ந்து BSNL லோகோவையும் ஒன்றியஅரசு காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது. முன்பிருந்த லோகோவில் இந்தியாவை இணைப்போம் என்றிருந்தது தற்போது பாரதத்தை இணைப்போம் என்றுள்ளது. BSNL லோகோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறங்கள் பாஜக கொடியின் நிறம் போல் உள்ளது. புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால் எங்கும் காவி நிறம்தான் தென்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

The post இத்தேசத்தில் உள்ள பொதுத்துறைகள் காவிமயமாக்கப்படுவது ஏன்?: செல்வப்பெருந்தகை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: