இது, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலும், வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்களது வருமானத்திற்காக உள்ளூர் நபர் ஒருவரை தினக்கூலி அடிப்படையில் பார்க்கிங் ஏரியாவில் நிற்க வைத்து, அங்கு வரும் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்த சொல்லி அனுப்ப அறிவுறுத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாமல்லபுரம் சுற்றுலா வந்த ஒரு காரை ஐந்து ரதம் பகுதியில் மறித்து பார்க்கிங்கில் நிறுத்த சொல்லி அந்த நபர் கூறியுள்ளார்.
அப்போது, காரில் வந்த பயணிகள் நாங்கள் ஐந்து ரதத்தை கடந்து சென்னைக்கு செல்கிறோம் என்று கூறியுள்ளனர். அப்போதும், வழிவிடாமல் அந்த உள்ளூர் நபர் காரை தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் காரில் இருந்து இறங்கி அந்த நபர் கையில் இருந்த பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி எங்களையே தகாத வார்த்தைகளால் திட்டுவியா என பைப் உடையும் வரை அந்த நபரை சினிமா பட பாணியில் சரமாரியாக தாக்கினர்.
இதில், வலி தாங்க முடியாமல் அந்த நபர் துடிதுடித்தார். அப்போது, ஒரு பெண் ரவுடியாக மாறி காலால் எட்டி எட்டி உதைத்து சரமாரியாக தாக்கினார். பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரும் காரில் ஏறி புறப்பட்டனர். மேலும், அவ்வழியாக சென்ற வெளிநாட்டு பயணி ஒருவர் இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த, வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து பார்க்கிங் ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவம் ஐந்து ரதம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post மாமல்லபுரத்தில் பார்க்கிங் ஊழியர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய பெண்கள்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.