மாதவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு

புழல்: செங்குன்றம், மாதவரம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு மாதவரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநாட்டில் மாதவரம் பகுதி செயலாளராக 3வது முறையாக கமலநாதன் தேர்வு செய்யப்பட்டார். பகுதி குழு உறுப்பினர்களாக சாரதி, ஆனந்தன், சூரியமூர்த்தி, சரவணன், தமிழ்ச்செல்வி, மைதிலி, ராமநாதன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ டி.கே.சண்முகம், கார்த்திக், குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மாநாட்டில் மாதவரம் விநாயகபுரம், கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,

மாதவரம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகின்ற குடிநீர் முறையான முறையில் வழங்கப்படவில்லை, அதனை உடனடியாக சரிசெய்ய சென்னை குடிநீர் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு தொடர்ந்து சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை அதிகளவில் உயர்த்துவதை கைவிட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மாதவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: