மியான்மரில் படகு கவிழ்ந்து 7 பேர் பலி

பாங்காக்: மியான்மரில் அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள். 30 பேர் மாயமாகி உள்ளனர். மியான்மரில் கியாக் கர் பகுதியில் ராணுவத்துக்கும் இனகுழுவினருக்கும் இடையே சண்டை நடந்து வருகின்றது. கடந்த ஒரு வாரமாக சண்டை நீடித்து வரும் நிலையில் அங்கு வசித்து வந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். நேற்று முன்தினம் கியாக் கர் பகுதியில் இருந்து சுமார் 70 பேர் ஒரே படகில் தெற்கு பிராந்தியத்தில் உள்ள மையீக் நகருக்கு புறப்பட்டதாக தெரிகிறது. படகு புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே அந்தமான் கடலில் மூழ்கியது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றது.

The post மியான்மரில் படகு கவிழ்ந்து 7 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: