ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்: அரசிதழில் வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என அரசிதழில் வெளியிடப்பட்டது. தொல்குடி, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், CM Arise ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ரூ.1,000 கோடி மதிப்பில் தொல்குடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெறலாம். CM Arise திட்டத்தில் தொழில் தொடங்க 35% வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்

The post ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்: அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: