அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி

சென்னை: அரசு ஊழியர் அகவிலைப்படியை 50% ல் இருந்து 53%ஆக உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறிய நன்றி உரையில்;

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. (குறள் – 390)

நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும் என கலைஞர் கூறினார்.

தன் மக்களின் தேவையறிந்து, தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 50%ல் இருந்து, 53 சதவீதமாக உயர்த்தி 16 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் பயன்பெறச்‌ செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி appeared first on Dinakaran.

Related Stories: