புழல் சிறை பெண் கைதி உயிரிழப்பு

புழல்: புழல் பெண்கள் சிறையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனர். இதில் சென்னை கோடம்பாக்கம் வட்டத் தெரு ஹரி லுக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாத்திமா கிறிஸ்டி(72). இவர் சென்னை சிபிசிஐடி போலீசாரால் மோசடி வழக்கில் கைதாகி, கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இவரை கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து தகவலின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புழல் சிறை பெண் கைதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: