அதன் விவரம் வருமாறு:
* சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திருப்பி, காரணீஸ்வரர் பக்கோடா தெரு – அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். எதிர் திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
* எம்ஆர்டிஎஸ் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு தாண்டி காந்தி சிலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. காவலரின் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நேரத்தில் மாற்று வழியாக அந்த வாகனங்கள் லைட் அவுஸ், எம்ஆர்டிஎஸ் சாலை வழியாக சென்று லாயிட்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* மயிலாப்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் மாநகர பேருந்து (தடம் எண்.21 ஜி) ராயப்பேட்டை ஒன்றாவது பாயின்ட் மற்றும் மியூசிக் அகாடமி பாயின்ட் மற்றும் டிடிகே சாலை, இந்தியன் வங்கி சந்திப்பு மற்றும் ராய்பேட்டை நெடுஞ்சாலை வழியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சந்திப்பு வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* கதீட்ரல் சாலை வழியாக லைட் அவுஸ் நோக்கி வரும் மாநகர பேருந்து (தடம் எண்.27 டி) வி.எம்.ெதருவில் திருப்பிவிடப்பட்டு, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை மற்றும் டி ஸ்லிவா சாலை, பக்தவச்சலம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, பீமனா கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை, சீனிவாசன் தெரு வழியாக ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம்.
* காமராஜர் சாலையில் (நேப்பியர் பாலம் முதல் லைட் அவுஸ்) அனைத்து வர்த்தக மற்றும் கனரக வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post காவலர் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு மெரினா பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்: கனரக வாகனங்கள் செல்ல தடை appeared first on Dinakaran.