வயநாட்டில் சோனியா காந்தி ரோட் ஷோ

திருவனந்தபுரம்: வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மூன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தியும், இடதுசாரி கூட்டணி சார்பில் சத்யன் மொகேரியும், பாஜ கூட்டணி சார்பில் நவ்யா ஹரிதாசும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய நாளை வயநாடு செல்கிறார். பிரியங்கா காந்தியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் உடன் செல்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் வயநாட்டுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை பிரியங்கா மற்றும் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் வர உள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் செல்கின்றனர். வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக கல்பெட்டாவில் நடைபெறும் ரோட் ஷோவிலும் இருவரும் கலந்து கொள்ள உள்ளனர். பிரியங்கா காந்தி வயநாட்டில் 10 நாட்கள் தங்கி இருந்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

The post வயநாட்டில் சோனியா காந்தி ரோட் ஷோ appeared first on Dinakaran.

Related Stories: