இதுகுறித்து கடல் வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கடல் என்பது அதிக அளவு உயிரினங்கள் உள்ள பல்லுயிர் நிறைந்த பகுதி. இதில் நம் கண்களுக்கு தெரியாத பாக்டீரியா மற்றும் பாசி போன்ற உயிரினங்கள் அதிகம் உள்ளன. அதுபோன்று கடலில் வாழும் ஒரு செல் உயிரியான ‘டைனோ ப்ளாச்சுலேட்’ வகையை சேர்ந்த ‘நாட்டிலுக்கா சின்டிலன்ஸ்’ எனும் மிதவை நுண்ணுயிரியால் இப்போது கடல் நீல நிறத்தில் ஜொலித்து வருகிறது. இதனை ‘சீ பார்க்கல்ஸ்’ அல்லது கடல் பொறி என அழைக்கப்படுகிறது.
இந்த மிதவை நுண்ணுயிரி, கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் உணவு ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, இருளில் ஒளி வீசி ஜொலிக்கிறது. இந்த நுண்ணுயிரியின் உடலில் உள்ள வேதிப்பொருளான லூசிபெரின், லூசிபரேஸ் ஆகியவை ஆக்சிஜனோடு சேரும்போது ஒளி வெளியாகிறது. அப்போது அந்த பகுதியின் அலை ‘புளோரசன்ட் நீல’ நிறத்தில் ஜொலிக்கும். இந்த நிகழ்வை பயோலுமினெசென்ஸ் என அழைக்கப்படுகிறது என்றார்.
The post மரக்காணத்தை தொடர்ந்து புதுச்சேரியில் நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள் appeared first on Dinakaran.