மேலும் அந்த வீடியோவில், சுரங்கப் பாதையின் பதுங்கு குழி வழியாக மற்றொரு பாதையில் செல்வதை காண முடிகிறது. தனது கையில் பைகளையும் வைத்துள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவத்தின் ஐடிஎஃப் செய்தித் தொடர்பாளர் நடவ் ஷோஷானி கூறுகையில், ‘2023 அக்டோபர் 7ம் தேதி தீவிரவாத தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, யாஹ்யா சின்வார் தனது மனைவி, மக்களுடன் சுரங்கப்பாதையில் ஒளிந்துகொண்டிருந்தார். மேலும் தனது தீவிரவாதிகள் நடத்திய கொலைகள், கடத்தல்கள் மற்றும் பலாத்காரங்களை அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்’ என்று கூறினார்.
The post தீவிரவாத தாக்குதலுக்கு முதல் நாள்; பதுங்கு குழிக்குள் இருந்த யாஹ்யா சின்வார்: புதிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் appeared first on Dinakaran.