அங்குள்ள ஏரியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் ஆனந்த குளியல் போட்டன. யானைகள் முள் பிளாட் பகுதியில் முகாமிட்டிருப்பதால், அதனை சுற்றியுள்ள மலசோனை, கண்ட காணப்பள்ளி, தாவரக்கரை, உள்ளிட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே இடத்தில் 10 யானைகள் முகாமிட்டுள்ளதால், அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
The post தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் ஆனந்த குளியல் போட்ட 10 யானைகள்: கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.