அவிநாசியில் மழை நீர் வடிகால் மற்றும் நீர் வழிப்பாதைகளை கண்காணித்து சுத்தப்படுத்துதல் மற்றும் துர்வாரும் பணியை பேரூராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டனர்.
சீனிவாசபுரம் முதல் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பின்புறத்தின் வழியாக செல்லும் நல்லாற்று நீரோடையில் இரண்டு கி.மீ., தூரம் வரை பொக்லைன் இயந்திரம் மூலம் துர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது.
The post நல்லாற்று நீரோடையில் துர்வாரும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.