தேவநேயப் பாவாணரின் இளையமகன் மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: தேவநேயப் பாவாணரின் புதல்வரும் தமிழரசு இதழில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான மணிமன்ற வாணன் (78) மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் புதல்வரும் ‘தமிழரசு’ இதழில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான மணிமன்ற வாணன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழுக்கு தொண்டு செய்த பெருமகனார் மொழிஞாயிறு தேவநேயப் பாவணரின் வழித்தோன்றலான மணிமன்ற வாணன் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post தேவநேயப் பாவாணரின் இளையமகன் மறைவு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: