தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் நியமனம்

புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக இருந்த ரேகா சர்மாவின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ஆணையத்தின் புதிய தலைவராக விஜயா கிஷோர் ரஹத்கரை ஒன்றிய அரசு நியமித்துள்ளது.  இது தொடர்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக விஜயா கிஷோர் ரஹத்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 65 வயது வரை பதவியில் இருப்பார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: