மேட்டூர் நீர்மட்டம் 95 அடியாக உயர்வு

மேட்டூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நேற்று 4வது நாளாக நீர்வரத்து 18,000 கனஅடியாக நீடிக்கிறது. அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.

அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 19,090 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 18,384 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு 1,100 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 94.65 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 95.88 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 59.63 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் நீர்மட்டம் 95 அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: