தமிழ் பல்கலை விழா கவர்னர் பங்கேற்பு அமைச்சர் புறக்கணிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று 100 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும், 86 மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 212 மாணவர்களுக்கு முதுநிலை பட்டமும் உள்பட மொத்தம் 656 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான சாமிநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். அதேபோல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரும் புறக்கணித்தனர்.

The post தமிழ் பல்கலை விழா கவர்னர் பங்கேற்பு அமைச்சர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: