ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆதரவாக பதிவு வாலிபர் மீது வழக்கு

கோவை: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவான வாசகங்கள், கருத்துகளை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை, குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேசன் எஸ்ஐ அழகுமாரி செல்வம் சமூக வலைதளங்களை பார்வையிட்டார். அப்போது, குனியமுத்தூர் முத்துசாமி சேர்வை தெருவை சேர்ந்த ஷேக் சபியுல்லாவின் (41) வாட்ஸ் அப் புரோபைலில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவான வாசகம் அடங்கிய போட்டோவை பதிவு செய்திருந்தது தெரியவந்தது. தகவலின்படி அவர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆதரவாக பதிவு வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: