தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: பொன்.குமார் வலியுறுத்தல்

சேலம்: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் நேற்று சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கட்டுமான ெதாழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் தமிழின் பெருமையை தரக்கூடிய அந்த வார்த்தையை மட்டும் திட்டமிட்டு நீக்கியுள்ளனர்.

ஆளுநர் ரவி பொறுப்பேற்ற பின்பு ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கிறார். ஆளுநர் தொடர்ந்து தமிழை, தமிழ்நாட்டு மக்களை, தமிழ் இனத்தை கலாச்சாரத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். இச்செயலை எல்லா கட்சியும் கண்டித்துள்ளது. ஆனால் பாஜ வக்காலத்து வாங்குகிறது. ஆளுநர் செயல் மிக மிக மோசமானது. பிரதமர் உடனடியாக ஆளுநரை திரும்ப பெற வேண்டும். அரசியல் பேச ஆளுநருக்கு ஆசை இருந்தால் பதவியை ராஜினாமா செய்து, பாஜ.,வில் சேர்ந்து என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் என்று தெரிவித்தார்.

The post தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: பொன்.குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: