ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு : ரூ.6000 அபராதம்

குமரி : குமரியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வட்டக்கோட்டை, விவேகானந்தபுரம் பகுதிகளில் உள்ள உணவகங்களில் அகஸ்தீஸ்வரம் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 2 உணவகங்களுக்கு ரூ.6000 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பழைய இறைச்சி, பழைய அரிசி சாதம் உள்ளிட்ட உணவு பொருட்கள், அழுகிய காய்கறிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை நிறமிகள், கலர் அப்பளம் அழிக்கப்பட்டது.

The post ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு : ரூ.6000 அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: